Monday, July 13, 2026
Home Blog Page 36

ராமநாதபுரம் மாவட்டத்தில் கருத்துக் கணிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாக்குதல்

0

ராமநாதபுரம் மாவட்டம்.
கீழக்கரை நகராட்சி கட்டிடத்தை ரூ. 4 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்க தமிழக அரசின் நிதி ஒதுக்கி உள்ளது கடந்த நகர மன்ற கூட்டத்தில் நகராட்சி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தீர்மானம் வைக்கப்பட்டது. அதற்கு அனைத்து சமுதாய கூட்டமைப்பு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.சில கவுன்சிலர்கள் நகராட்சி கட்டிடம் கீழக்கரை நகருக்குள் அமைய வேண்டும் என்றனர் தற்போது இங்கே ஒரு நகராட்சி கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக கீழக்கரையில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் கருத்து கேட்பு கூட்டம் தனியார் மஹாலில் நடந்தது.இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கீழக்கரை நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் (ம)திமுக கவுன்சிலர்கள் அனைத்து சமுதாய கூட்டமைப்பு கவுன்சிலர் ஷேக் உசைன் ஜமாத்தார்கள் (ம) பலர் கலந்து கொண்டனர்.
அப்போது எம்எல்ஏ காதர் பாட்ஷா பேசுகையில் கீழக்கரை நகராட்சி கட்டிடம் குறித்து மீண்டும் ஒருமுறை நகராட்சி கமிஷனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.இதனை அடுத்து நகர் மன்ற துணைத் தலைவர் மற்றும் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கிரவுன் ஹீசைன் என்பவருக்கும் திமுக நகர்மன்ற துணைத் தலைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
தகவல் அறிந்த கீழக்கரை காவல் ஆய்வாளர் பத்மநாதன் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழைத்து இரு தரப்பு மக்களையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.கருத்துக்கணிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை தாக்கியதாக நகர்மன்ற துணைத் தலைவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் M.N. அன்வர் அலி

ராமநாதபுரம் மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது

0

ராமநாதபுரம் மாவட்டம்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டது.
இது சம்பந்தமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன்அமுதா ராணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் புற்றுநோய் அறுவை சிகிச்சை துவக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவர்கள் கணேஷ் பாபு,நித்திய பிரியதர்ஷினி, முனீஸ்வரர் பாண்டியன், சி.பி.கிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மூன்று பேருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது; இனி வரும் காலங்களில் கர்ப்பப்பை புற்றுநோய்,மலக்குடல் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து வகையான புற்று நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். தற்போது ரேடியேசன் அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது.
ரேடியேசன் பிரிவு அமைத்தவுடன் புற்றுநோய் பரிசோதனை முதல் அறுவை சிகிச்சை வரை ராமநாதபுரம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்ய முடியும். தேவையைப் பொறுத்து புற்றுநோய் பிரிவுக்கென தனி வார்டு அமைக்க திட்டமிட்டுள்ளோம், என்று அவர் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் M.N. அன்வர் அலி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை குழு கனிமொழி கலந்து கொண்டார்

0

தமிழக சட்டபேரவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் கனிமொழி எம்பி அனைத்து சங்கத்தினரிடம் தொழிலாளர்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டார். கருத்து கேட்பு கூட்டம் எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம்,
ராமநாதபுரத்திற்கு திமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் கனிமொழி எம்பி வருகை தந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பல தொழில்கள் செய்து வரும் பல்வேறு சமுதாய மக்கள், வியாபார பெருமக்கள், அனைத்து தொழிலாளர்கள், வியாபாரி சங்கங்கள்,மீனவ சமுதாய சங்கங்கள், ஆகியோரிடம் தனித்தனியாக மனுவைப் பெற்றுக் கொண்டதுடன் அவர்களின் கோரிக்கைகள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் சேர்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி எம்பி. உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த கனிமொழி எம்பி, அமைச்சர் பெரியகருப்பன், அப்துல்லா எம்பி, டிகேஎஸ் இளங்கோவன், மானாமதுரை எம்எல்ஏ. தமிழரசி, உள்ளிட்ட குழுவினருக்கு மலர் கொத்துக் கொடுத்தும், புத்தகங்கள் கொடுத்தும் திமுக மாவட்ட செயலாளரும் எம்எல்ஏ.காதர் பாட்சா முத்துராமலிங்கம் பூ கொத்து கொடுத்து புத்தகங்கள் கொடுத்து வரவேற்றார். இதனை அடுத்து
கழக இலக்கிய அணி தலைவர் முன்னாள் எம்பிகள் அன்வர் ராஜா, பவானி ராஜேந்திரன், உள்ளிட்ட சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மிசா அஹமது தம்பி, ஆகியோர் மலர் கொத்துக் கொடுத்தும்,புத்தகங்கள்(ம) சால்வை கொடுத்தும் வரவேற்றனர். இதில்
முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, டாக்டர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், இராமேஸ்வரம் நகர்மன்ற தலைவர் கே.இ.நாசர் கான்,
துணை தலைவர்கள்
தட்சிணா மூர்த்தி, பிரவீன் தங்கம்,மாநில இளைஞரணி துணைத் தலைவர் இன்பா ரகு,மாவட்ட துணை செயலாளர்கள் கருப்பையா, ஆதித்தன்,உள்ளிட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் சிகாமணி,சாயல்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் குலாம் மொய்தீன்,மண்டபம் பேரூர் கழக செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர்,மண்டபம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் நிலோபர்கான்,மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் சேசு, இராமேஸ்வரம் போஸ்,மீனவர் சங்கப் பிரதிநிதி தேவதாஸ், கீழக்கரை நகர்மன்ற துணை தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்
ஸ்டெல்லா அகஸ்டீன்,
காஞ்சிரங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் கோடாங்கி முனியசாமி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சீனி செய்யது ,சின்ன கடை பாசி பட்டறைத்தெரு ஜமாஅத் நிர்வாக டிரஸ்டி அஸ்ரப் அலி, டிரஸ்டி ஜவாஹிருல்லா உள்ளிட்ட நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் M.N. அன்வர் அலி

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது

0

காரைக்காலில் ஏழை, எளிய மாணவிகளின் முழு கல்லூரி படிப்புக்கு உதவிடும் வகையில் அறக்கட்டளை தொடக்கம். பெற்றோர்கள் வரவேற்பு.

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அம்மனியம்மாள், ஈஸ்வரி ராமநாதன், உமா சுந்தரி கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

இதன் நிறுவனர் உமா சுந்தரி ரிப்பன் வெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில்…

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பகுதியில் கடந்த 1960 ம் ஆண்டு காந்திஜி ஏழை சிறுமிகளின் அன்பு நிலையம் தொடங்கப்பட்டு மாணவிகளுக்கு கல்வி உதவி மற்றும் உணவுகளை தங்களது முன்னோர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வந்தனர்.

அது காலப்போக்கில் மறைத்து விட்டதால் மீண்டும் ஏழை எளிய மாணவிகளுக்கு உதவிடும் வகையில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக ஜிப்மர் மருத்துவமனை, அவ்வையார் கலை அறிவியல் கல்லூரி, பெரியார் கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி என நான்கு கல்லூரி மாணவிகளை தேர்வு செய்து முழு கல்லூரி படிப்புக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளையும் தேர்வு செய்தும் கல்லூரி படிப்புக்கு உதவிடும் வகையில் செயல்பட இருப்பதாக கூறினார் ரெட் நியூஸ் தமிழ் செய்திக்காக காரைக்கால் மாவட்ட செய்தியாளர் மோகன்ராஜ்

ராமநாதபுரம் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்

0

ராமநாதபுரம் மாவட்டம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த
திருவாடாணை மேற்கு ஒன்றிய செயலாளர் கந்தவேல்
திருவாடாணை கிழக்கு ஒன்றிய செயலாளர் K.K. பாண்டி
ஆர்.எஸ். மங்கலம் ஒன்றிய செயலாளர் நந்திவர்மன்
திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் உடைய தேவர்
போகலூர் ஒன்றிய செயலாளர் A.G. சுரேஷ்
நயினார்கோவில் வடக்கு ஒன்றியச் செயலாளரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் Μ.Κ. ரஜினிகாந்த்
நயினார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலன்
முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி
முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளரும், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான சேதுராமன்
முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி
கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜாங்கம்
கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம்
சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ்
ராமேஸ்வரம் வடக்கு நகர செயலாளர் இராமநாதன்
ராமநாதபுரம் கிழக்கு நகர செயலாளர் பாலசுப்பிரமணியம்
பரமக்குடி நகர செயலாளர் முத்தரசு
தொண்டி பேரூராட்சி செயலாளர் ராஜ்குமார்
ராஜசிங்கமங்கலம் பேரூராட்சி செயலாளர் மாமுல்
அபிராமம் பேரூராட்சி செயலாளர் மகேஸ்வரன்
திருவாடாணை தொகுதி அமைப்பாளர் ராமகிருஷ்ணன்
பொதுக்குழு உறுப்பினர் கோசலை செல்வம்
மாவட்ட பேரவைச் செயலாளரும், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான நாகநாதன்
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பூப்பாண்டி
மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் வெற்றிமுருகன்
மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திலகர்
மாவட்ட பாசறைச் செயலாளர் மணிகண்டன்
ஆகியோர் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.ரெட் நியூஸ் தமிழ் செய்திக்காக துணை ஆசிரியர் விழுப்புரம் ஜோதி லிங்கம்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் கூட்டேரிப்பட்டில் காங்கிரஸ் கட்சியினர் நூதனப் போராட்டம்

0

*மயிலத்தில் காங்கிரஸார் நூதன போராட்டம்*

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.செல்வப் பெருந்தகை MLA.,

செயல் தலைவர் டாக்டர் M.K.விஷ்ணு பிரசாத் M.P., அறிவுறுத்தலின்படி

விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வழக்கறிஞர் R.P.ரமேஷ் வழிகாட்டுதலின்படி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கம் செய்த மைய பாஜக அரசை கண்டித்து

30 1 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் கூட்டேரிப்பட்டில் உள்ள மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில்

மயிலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில்

கருப்புத் துணியால் வாயை அடைத்து மவுனம் காத்திடும் அறப்போராட்டத்தை செய்யப்பட்டது

இந்த நூதன போராட்டத்திற்கு மயிலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் மெடிக்கல் M.செல்வம் தலைமையற்றார்

மாநில பொதுக்குழு உறுப்பினர் இல.கண்ணன், விக்கிரவாண்டி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் V.P.குமார், வட்டாரத் துணைத் தலைவர் D.சுரேஷ்பாபு, ஐடி விங் மாவட்ட தலைவர் S.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் K.முத்து நாராயணன், P.பொன்னுசாமி, E.கருணாநிதி, P.ஏழுமலை, E.முருகன், K.செல்லப்பன், ஐடி விங் மாவட்ட செயலாளர்கள் E.ராஜ்குமார், K.கார்த்தி, M.பாண்டுரங்கன்,

மகிளா காங்கிரஸ் A.காளியம்மாள், R.டில்லிபாபு, G.குப்பன் ஆகிய நிர்வாகிகளும் நூறு நாள் வேலை தொழிலாளர் தாய்மார்களும் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது

0

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பாக 50-க்கும் மேற்பட்டோர்

கிராம நிருவாகத்தின் முதுகெலும்பாக திகழும் கிராம நிருவாக அலுவலகத்தை கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனமயமாக்கம் செய்யப்பட்ட கிராம நிருவாக அலுவலகமாக அமைத்து தரக்கோருதல்.

கிராம நிருவாக அலுவலர்களின் TNPSC நேரடி நியமன முறையில், கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க கோருதல்.

கிராம நிருவாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ள நிலையில் பத்தாண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை கிராம நிருவாக அலுவலர் எனவும், இருபதாண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, சிறப்புநிலை கிராம நிருவாக அலுவலர் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட கோருதல்.

கிராம நிருவாக அலுவலர்களின் பதவி உயர்வில் கிராம நிருவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்களின் விகிதாச்சாரங்களுக்கேற்ப, 30சதவீதம் என்பதிலிருந்து 50சதவீதமாக மாற்றம் செய்து, கிராம நிருவாக அலுவலர்களின் பதவி உயர்வுக்கான கால வரம்பை 6 ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைத்து அரசாணை வெளியிட கோருதல்,

தேர்வுநிலை கிராம நிருவாக அலுவலர்களுக்கு, முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஊதியமும், சிறப்புநிலை கிராம நிருவாக அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஊதியமும் வழங்க கோருதல்.

TSLR பட்டா மாறுதலில் கிராம நிருவாக அலுவலர்களின் பரிந்துரை பெற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், இதுநாள் வரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை உடனடியாக நடைமுறைப்படுத்த கோருதல்.
உள்ளிட்ட 6அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம்
வட்டத் தலைவர் G. வெங்கடாசலம் தலைமை வகித்தார், வட்டச் செயலாளர் p. ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார்,

மாவட்ட செயலாளர் அ.ஏழுமலை, கௌரவ தலைவர்,V. பலராமன், மற்றும் வட்ட ஒருங்கிணைப்பாளர் உத்திரகுமார் முக்கிய உரை ஆற்றினார்கள்,

வட்டத் துணைத் தலைவர் பரணிதரன், இனண செயலாளர்கள் மதியழகன், காமேஷ் குமார் போராட்டத் திருபுரையாற்றினார்கள்,

வட்ட பொருளாளர் சங்கர் நன்றியுரை ஆற்றினார்
ரெட் நியூஸ் தமிழ் செய்திக்காக திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் குப்பன்

புதுச்சேரியில் மாநிலம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்கள் முற்றுகைப் போராட்டம்

0

புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் இரகு. அன்புமணி தலைமையில்இன்று 30 1 2026 காலை 11 மணியளவில் புதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் ( பால்பண்ணை ) முன்பு 200க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் மாநிலம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது 1. ஒன்பது மாத காலமாக போடாத தீவனம் மானியத்தை உடனடியாக வழங்கி விடு 2. மாநிலம் முழுவதும் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட கறவை மாட்டில் ஊழல் நடைபெற்றது ஒட்டி பிடிக்காத மாடுகள் நேர்மையான முறையில் பால் உற்பத்தியாளர்களின் ஒப்புதலோடு மாடுபிடிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும்
3. ஆறு ஆண்டு காலமாக வாழ்வு உயர்வு என்பது இல்லை தீவனம் புண்ணாக்கு பருத்திக்கொட்டை விலை ஏற்றம் இருந்தும் பால் விலை உயர்வை அறிவிக்காததை கண்டித்து இந்த முற்றுகை போராட்டம் இரண்டு மணி நேரம் நடைபெற்றது பால் பண்ணையில் இருந்து எந்த வாகனமும் வெளியே வரவில்லை உள்ளேயும் போகவில்லை
4. பேச்சுவார்த்தைக்கு கூட்டுறவுத் துறையின் பால் அபிவிருத்தி அதிகாரி மற்றும் பால் பண்ணை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் இன்னும் பத்து நாட்களுக்குள் மானியத்தை போடுவதாகவும் புதிய மாடு பிடிப்பதில் அரசாங்கத்தோடு பேசி ஒரு முடிவை ஏற்றுவது என விலை உயர்வையும் அரசோடு பேசுவது என்று பேச்சுவார்த்தையில் தெரிவித்த அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

0

ராமநாதபுரம் மாவட்டம்.
ராமநாதபுரம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் இன்று நகர் மன்ற கூட்டரங்கில் நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன்,துணைத் தலைவர் பிரவீன் தங்கம் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் ஆரம்பம் முதலே காரசாரமாக கூட்டம் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு நகராட்சி குறைபாடுகளை நீக்கித்தரவில்லை என திமுக கவுன்சிலர்களான 3வது வார்டு கவுன்சிலர் மங்கையர்கரசி, 25 வது வார்டு கவுன்சிலர் செல்வி, 26வது வார்டு கவுன்சிலர் லட்சுமி, 17வது வார்டு கவுன்சிலர் ஜோதி புஷ்பம்.8வது வார்டு
கவுன்சிலர் செல்வராணி, 10வது வார்டு கவுன்சிலர் சபீகா, 12 ஆவது வார்டு கவுன்சிலர் ஸ்டாலின், 33வது வார்டு கவுன்சிலர் ஜவா,
15 வது வார்டு தமுமுக கவுன்சிலர் காதர் பிச்சை, 4வது வார்டு கவுன்சிலர் அமமுக தனபாண்டியம்மாள், 21 வது வார்டு,அதிமுக இந்திரா மேரி ஆகியோர் மன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்து
நகர் மன்ற தலைவர் கார்மேகம் கூறுகையில் இன்னும் 10 நாட்களுக்குள் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தரப்படும் என்று கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் M.N. அன்வர் அலி

வேளாண் மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளி இணைந்து நடத்திய போதை பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி

0

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவர்கள், பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்துக்கு அருகிலுள்ள கிராமத்தில் தங்கி கிராம வாழ்வியல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, C.N. பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒழுக்க விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கைபேசி பயன்பாட்டின் நன்மை–தீமைகள், 12ஆம் வகுப்பிற்குப் பிறகான கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிகளை வேளாண் மாணவர்கள் ரிதோஷ், சம்பத், சரவணன், சத்யராஜ், செல்வகுமார், சுபம், சிவராஜ், சந்தோஷ், சோம்தத், ஸ்ரீகாந்த், சீனிவாசன், சுயாஷ் ஆகியோர் முன்னெடுத்தனர்.
பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் விஜய் செல்வராஜ், கமலக்கண்ணன், அறிவிக்கரசு ஆகியோரின் வழிகாட்டுதலுடனும், பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் அனுமதியுடனும் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி வளாகத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பலா மற்றும் தேங்காய் கன்றுகளை நட்டனர்.
மேலும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பலர் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயனடைந்தனர். போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது.
இந்தப் பயிற்சித் திட்டம் மாணவர்களிடையே சமூகப் பொறுப்பு உணர்வையும், கிராம மக்களிடையே கல்வி மற்றும் ஆரோக்கிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதாக அமைந்தது.