Monday, August 31, 2026
Homeசெய்திகள்அதிர்ச்சி: விளாத்திகுளம் அருகே 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – வாலிபர் போக்சோ சட்டத்தில்...

அதிர்ச்சி: விளாத்திகுளம் அருகே 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!

அதிர்ச்சி: விளாத்திகுளம் அருகே 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, பள்ளி மாணவி ஒருவரைக் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

சம்பவத்தின் பின்னணி:

விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த முத்துமாரியப்பன் என்பவரது மகன் கார்த்திக்குமார் (23). இவர், புதூர் – கம்பத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால், அந்த மாணவி சம்பவத்தன்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

 

கத்தியைக் காட்டி மிரட்டல்:

மாணவி தனியாக இருப்பதை நோட்டமிட்ட கார்த்திக்குமார், திடீரென வீட்டிற்குள் புகுந்து மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். பின்னர் அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்ய முயன்றார். இதனால் பயந்துபோன சிறுமி சத்தமிட்டதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆட்கள் வருவதைக் கண்ட கார்த்திக்குமார் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.

 

போலீஸ் நடவடிக்கை:

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் இது குறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கார்த்திக்குமாரைத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments