இருவருக்கும் தூக்கு தண்டனை தான் கொடுத்திருக்கனும் – டிக்டாக் அபிராமியை பார்த்து நீதிபதி சொன்னது என்ன?
* தனது குழந்தைகளை கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளி அபிராமி, 2வது குற்றவாளி மீனாட்சி சுந்தரம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி உணவு இடைவேளைக்கு பின் தண்டனை குறித்த விவரங்களை வாசிப்பதாக கூறிச்சென்றார்
* ஆனால் அடுத்த 10வது நிமிடமே நீதிபதி செம்மல், நீதிமன்றத்துக்கு திரும்பினார், இப்படி ஒரு குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்காமல் எப்படி என்னால் சாப்பிட முடியும்?
* அதனால் தண்டனை விவரங்களை வாசித்த பின்னரே சாப்பிட இருப்பதாக கூறி தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்
* இந்த வழக்கில் அபிராமிக்கும் மீனாட்சி சுந்தரத்துக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்
* இருந்தாலும் நான் வாழ்வது காந்தி தேசம், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் என்று தண்டனை வழங்க முடியாமல் சூழ்நிலை தடுக்கின்றது
* ஒரு தாயே தான் பெற்ற இரு குழந்தைகளை, தன்னுடைய காம இச்சைக்காக கொலை செய்திருப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது
* நம் நாட்டில் பிள்ளை பாக்கியம் இல்லாமல் எத்தனை பெண்கள் தவமிருக்கிறார்கள்? அப்படி இருக்க இது மன்னிக்க இயலாத குற்றம்
* முதல் குற்றவாளியான அபிராமிக்கும், அவருக்கு இணையாக மீனாட்சி சுந்தரத்திற்கும் வாழ் நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து உத்தரவிடுகிறேன்
கோரிக்கையும் நிராகரிப்பும்
* நான் ஏற்கனவே 7 வருடம் சிறையில் இருந்து விட்டேன், எனது தாய் தந்தை இருவரும் 70 வயதை கடந்தவர்கள் அவர்களை பார்த்துக் கொள்ள இருப்பதால் கருணை காட்டவேண்டும் என மீனாட்சி சுந்தரம் கோரிக்கை
* நானும் எனது பெற்றோரை கவனித்துக் கொண்டு மீதி காலத்தை கழிக்க வேண்டும் அதனால் எனது தண்டனையை குறைக்க வேண்டும் என அபிராமியும் கோரிக்கை விடுத்த நிலையில்,
* இந்த பொறுப்புணர்வு காம இச்சைக்காக இரு குழந்தைகளை கொலை செய்வதற்கு முன்பு இருந்திருக்க வேண்டும் இரக்கம் காட்ட இயலாது
– நீதிபதி செம்மல் உத்தரவு
