Home செய்திகள் சிவகாசி அருகே பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் பலி. வீட்டில் சட்டவிரோத பட்டாசு தயாரித்ததால் ...

சிவகாசி அருகே பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் பலி. வீட்டில் சட்டவிரோத பட்டாசு தயாரித்ததால் நிகழ்ந்த சம்பவம்

0

சிவகாசி; சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

விவரங்கள் பின்வருமாறு;

சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல் குளத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோத பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகத் தெரிகிறது. வழக்கம் போல், இங்கு பலர் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத உராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்தன. பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்ததால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

தீபாவளி நெருங்கி வருவதால், அனுமதியின்றி வீடுகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும், அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடத்தி சட்டவிரோத பட்டாசு உற்பத்தியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version