திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம் 2026: நேரம் மற்றும் முக்கிய தகவல்கள்!
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி நன்னாளையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் “ஓம் நம சிவாய” மந்திரம் முழங்க கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், சிவபெருமானே மலை வடிவில் எழுந்தருளியிருப்பதாக நம்பப்படுவதால், இந்த 14 கிலோமீட்டர் மலையைச் சுற்றி வருவது அளவற்ற புண்ணியத்தை வழங்கும் என்பது ஐதீகம்.
கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரம்: இந்த ஆண்டிற்கான சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கான நேர விவரங்கள் இதோ:
-
கிரிவலம் தொடங்க வேண்டிய நேரம்: ஏப்ரல் 30-ஆம் தேதி இரவு 9:12 மணி முதல் தொடங்கலாம்.
-
கிரிவலம் நிறைவு செய்ய வேண்டிய நேரம்: மே 1-ஆம் தேதி (இன்று) இரவு 10:52 மணி வரை கிரிவலம் மேற்கொள்ளலாம்.
-
பௌர்ணமி திதி: ஏப்ரல் 30 இரவு 9:51 மணி முதல் இன்று இரவு 11:07 மணி வரை நீடிக்கிறது.
சித்ரா பௌர்ணமியின் தனிச்சிறப்பு: வருடத்தின் அனைத்து பௌர்ணமிகளில் கிரிவலம் சென்ற பலனை, இந்த ஒரே ஒரு சித்ரா பௌர்ணமியில் கிரிவலம் வருவதன் மூலம் பெற முடியும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
திருவண்ணாமலை கிரிவலம் குறித்த நேரலை காட்சிகள் மற்றும் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ள எங்களது RedNewsTamil யூடியூப் சேனலை இப்போதே சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! 🔔
| வரிசை | லிங்கத்தின் பெயர் | திசை | பலன்கள் |
| 1 | இந்திர லிங்கம் | கிழக்கு | செல்வம் மற்றும் அதிகாரம் |
| 2 | அக்னி லிங்கம் | தென்கிழக்கு | நோயற்ற வாழ்வு |
| 3 | எம லிங்கம் | தெற்கு | நீண்ட ஆயுள் |
| 4 | நிருதி லிங்கம் | தென்மேற்கு | தடைகள் நீங்குதல் |
| 5 | வருண லிங்கம் | மேற்கு | மழை மற்றும் வளமை |
| 6 | வாயு லிங்கம் | வடமேற்கு | சுவாச ஆரோக்கியம் |
| 7 | குபேர லிங்கம் | வடக்கு | பொருளாதார உயர்வு |
| 8 | ஈசான்ய லிங்கம் | வடகிழக்கு | மன அமைதி மற்றும் ஞானம் |



