Home செய்திகள் ஆதார் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல: உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

ஆதார் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல: உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

0

புதுடெல்லி: ஆதார் ஒரு செல்லுபடியாகும் அடையாள ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பீகாரில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு திருத்தத்தின் போது ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை வாக்காளர்களின் குடியுரிமை ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிபந்தனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் ஆணையம் மாநிலத்தின் வாக்காளர் பட்டியலை சிறப்பு திருத்தும் பணியை மேற்கொண்டுள்ளது.

இந்தப் பணியில், ‘ஜனவரி 1, 2003 அன்று பீகாரில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ளவர்கள் எந்த துணை ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இருப்பினும், பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கு எதிராக பல்வேறு கட்சிகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் போது ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை வாக்காளர்களின் குடியுரிமை ஆவணங்களாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இது குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆதார், குடும்ப அட்டை மற்றும் பிற ஆவணங்களை குடியுரிமை ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்றுக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் கூறியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version