நெதன்யாகுவுக்கு எதிராகத் திரண்ட இஸ்ரேல் மக்கள்:
டெல் அவிவ்:
ஈரானுக்கு எதிரான போர் ஒரு மாதத்தைக் கடந்தும் ஓயாத நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அந்நாட்டு மக்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். “போரை நிறுத்து, அமைதியை நிலைநாட்டு” என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
நீடிக்கும் போர் – பணியாத ஈரான்: கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போரில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரான் விரைவில் வீழ்ந்துவிடும் என இஸ்ரேலும் அமெரிக்காவும் கணித்தன. ஆனால், ஈரானின் கடும் பதிலடித் தாக்குதல்கள் இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபா போன்ற முக்கிய நகரங்களை நிலைகுலையச் செய்துள்ளன. ஏவுகணைத் தாக்குதல்களால் மக்கள் தொடர் அச்சத்திலேயே வாழும் சூழல் உருவாகியுள்ளது.
பிரதமர் இல்லம் முற்றுகை:
ஜெருசலேமில் உள்ள பிரதமர் நெதன்யாகுவின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற 250-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், பாரிஸ் சதுக்கத்தில் திரண்டு பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல் அவிவ் (Habima Square) மற்றும் ஹைஃபாவிலும் (Horev) போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், காவல்துறையினர் பலரைத் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். நெதன்யாகுவின் கொள்கைகள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், தேவையற்ற போரினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
🟥RED NEWS TAMIL 🟥
30, MONDAY MARCH.2026






