திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (50). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சர்தார் என்பவருக்குச் சொந்தமான, ஏரிக்கரை ஓரம் உள்ள சுமார் மூன்று ஏக்கர் விளைநிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
. கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிரிந்த நிலையில் தமிழரசி தனது பிள்ளைகளுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சக்திவேல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்தாண்ட பட்டு பகுதியைச் சேர்ந்த அமிர்தம் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில்
நேற்று இரவு சக்திவேல் மற்றும் அமிர்தம் ஆகிய இருவரும் குடிசையில் தூங்கிக் கொண்டு இருந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள், தப்பிக்க முடியாதவாறு வெளிப்பக்கமாகப் கதவை பூட்டிவிட்டு, தீ வைத்துள்ளனர்.
தீ மளமளவெனப் பரவியதில், வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட சக்திவேல் மற்றும் அமிர்தம் ஆகிய இருவரும் வெளியே வர முடியாமல் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த செங்கம் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் குப்பன்
