Home செய்திகள் அதிர்ச்சியில் வேளாங்கண்ணி! எங்கும் “TVK” முழக்கங்கள்… ஆன்மீகத் தலங்களை அரசியல் களமாக்குகிறார்களா விஜய் ரசிகர்கள்? ஒரு...

அதிர்ச்சியில் வேளாங்கண்ணி! எங்கும் “TVK” முழக்கங்கள்… ஆன்மீகத் தலங்களை அரசியல் களமாக்குகிறார்களா விஜய் ரசிகர்கள்? ஒரு விரிவான ரிப்போர்ட்!

0

அதிர்ச்சியில் வேளாங்கண்ணி! எங்கும் “TVK” முழக்கங்கள்… ஆன்மீகத் தலங்களை அரசியல் களமாக்குகிறார்களா விஜய் ரசிகர்கள்? ஒரு விரிவான ரிப்போர்ட்!

நாகப்பட்டினம்: “ஆர்வக்கோளாறுக்கும் ஒரு எல்லை உண்டு” – இதுதான் இன்று வேளாங்கண்ணி மற்றும் கொடைக்கானலில் இருக்கும் சாமானிய மக்களின் குமுறலாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகைக்காகக் காத்திருந்த ரசிகர்கள், புனிதத் தலங்களுக்குள் அரசியல் முழக்கங்களை எழுப்பிய விதம், பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனிதம் சிதைக்கப்படுகிறதா? – வேளாங்கண்ணி நிலவரம்: நேற்று நள்ளிரவு முதல் வேளாங்கண்ணி ஆலயத்தில் விஜய் ரசிகர்கள் குவிந்தனர். விஜய் வருகை தரப்போகிறார் என்ற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் நடந்துகொண்ட விதம் முதிர்ச்சியற்றதாக இருந்தது.

  • திருப்பலியில் இடையூறு: ஆலயத்தில் மிக அமைதியாகத் திருப்பலி (Mass) நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கும்பல் “TVK.. TVK..” என முழக்கமிட்டது.

  • பக்தர்கள் வேதனை: தங்கள் பாரங்களைச் சுமந்து கொண்டு, கண்ணீரோடு பிரார்த்தனை செய்ய வந்த பக்தர்கள், இந்த அரசியல் கூச்சலால் நிலைகுலைந்து போயினர். “இறைவனிடம் பேச வந்த இடத்தில் இந்த அரசியல் கூச்சல் எதற்கு?” என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மதுரை கள்ளழகர் திருவிழாவிலும் இதே கூத்து: கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்த இடத்தில், வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக ஒரு அரசியல் கட்சியின் (TVK) கொடி உயர்த்திப் பிடிக்கப்பட்டது.

  • திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளே செய்யத் துணியாத இந்தச் செயலை, டிவிடி ரசிகர்கள் செய்த விதம் ஆன்மீகவாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  • “கள்ளழகரே நேரில் வந்திருந்தாலும் இவர்களைப் பார்த்து ‘நிறுத்துங்கள்’ என்றுதான் சொல்லியிருப்பார்” என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுகின்றன.

கொடைக்கானலில் நிம்மதி இழந்த சுற்றுலாப் பயணிகள்: இயற்கை எழிலை ரசிக்கவும், மன அமைதி பெறவும் கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்தத் தொல்லை விடவில்லை. அங்கு சென்ற சில டிவிடி உறுப்பினர்கள், ஏரி மற்றும் பூங்கா பகுதிகளில் அரசியல் கோஷங்களை எழுப்பியுள்ளனர். விடுமுறைக்குச் சென்ற இடத்தில் கூட அரசியல் முழக்கங்களைக் கேட்பது மிகுந்த எரிச்சலைத் தருவதாகப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

யார் இவர்களைத் தடுப்பது? ரசிகர்களின் இந்த அதீத உற்சாகம், அவர்கள் தலைவரான விஜய்க்குத் தான் அவப்பெயரைத் தேடித்தரும் என்பதை அவர்கள் உணர வேண்டும். திரையரங்குகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் காட்ட வேண்டிய உற்சாகத்தை, தேவாலயங்கள் மற்றும் ஆன்மீகத் திருவிழாக்களில் காட்டுவது முறையல்ல. ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது அதன் தொண்டர்களின் ஒழுக்கத்தில்தான் அடங்கியிருக்கிறது. இனியாவது யாராவது இவர்களுக்கு ‘எங்கே எப்படி நடக்க வேண்டும்’ என்று பாடம் எடுப்பார்களா?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version