Wednesday, April 15, 2026
Google search engine
Homeசெய்திகள்சாத்தான்குளம் தந்தை - மகன் மரண வழக்கு: 9 காவலர்களுக்கும் தூக்குத் தண்டனை - மதுரை...

சாத்தான்குளம் தந்தை – மகன் மரண வழக்கு: 9 காவலர்களுக்கும் தூக்குத் தண்டனை – மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை – மகன் மரண வழக்கு:

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பின்னணி:

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம், கொரோனா ஊரடங்கு காலத்தில் கடை திறந்திருந்தது தொடர்பாக சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் இருவர் மீதும் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலால் இருவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு:

இந்த வழக்கை “அரிதினும் அரிதான வழக்கு” (Rarest of Rare) என்று குறிப்பிட்ட நீதிபதி, காவலர்களின் செயல் மன்னிக்க முடியாதது என்று சாடினார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது காவலர்களும் குற்றவாளிகள் என கடந்த மார்ச் 23 அன்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

வரிசை எண் பெயர் மற்றும் பதவி தண்டனை விவரம் அபராதம் (ரூபாய்)
A1 ஸ்ரீதர் (காவல் ஆய்வாளர்) இரட்டை மரண தண்டனை + 21 ஆண்டுகள் சிறை 84,10,000
A2 பாலகிருஷ்ணன் (உதவி ஆய்வாளர்) இரட்டை மரண தண்டனை + 8 ஆண்டுகள் சிறை 84,10,000
A3 ரகு கணேஷ் (சார்பு ஆய்வாளர்) இரட்டை மரண தண்டனை + 18 ஆண்டுகள் சிறை 52,00,000
A4 முருகன் (தலைமை காவலர்) இரட்டை மரண தண்டனை + 11 ஆண்டுகள் சிறை 50,00,000
A5 சாமதுரை (காவலர்) இரட்டை மரண தண்டனை + 8 ஆண்டுகள் சிறை 2,25,000
A6 முத்துராஜ் (தலைமை காவலர்) இரட்டை மரண தண்டனை + 11 ஆண்டுகள் சிறை 32,00,000
A7 செல்லதுரை (காவலர்) இரட்டை மரண தண்டனை + 8 ஆண்டுகள் சிறை
A8 தாமஸ் பிரான்சிஸ் (தலைமை ஆய்வாளர்) இரட்டை மரண தண்டனை + 11 ஆண்டுகள் சிறை 40,46,000
A9 வெயிலுமுத்து (காவலர்) இரட்டை மரண தண்டனை + 8 ஆண்டுகள் சிறை
A10 பால்துரை (சிறப்பு துணை ஆய்வாளர்) இறந்துவிட்டதால் தண்டனை அறிவிக்கப்படவில்லை

ஆயுள் தண்டனை வழங்குவது இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் காவலர்களிடையே போதிய அச்சத்தை ஏற்படுத்தாது என்றும், இத்தகைய கொடூரமான செயல்களுக்கு மரண தண்டனையே மிகச்சரியான தீர்ப்பு என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு நீதியாகக் கருதப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments