Home உலகம் மயிலம் அல்லது விக்கிரவாண்டி தொகுதி ஒதுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம்

மயிலம் அல்லது விக்கிரவாண்டி தொகுதி ஒதுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம்

0

காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கிட வலியுறுத்தி மயிலம் வட்டார கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்*

விரைவில் நடக்க இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் மயிலம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கித் தரக் கோரியும் அப்படி ஒதுக்குகின்ற தொகுதியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வழக்கறிஞர் R.P.ரமேஷ் -க்கு சீட் வழங்க கோரியும் மயிலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

25 2 2026 புதன்கிழமை காலை 10:30 மணி அளவில் மயிலம் தையல்நாயகி என்னும் தனியார் திருமண மண்டபத்தில் மயிலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது

வட்டாரத் தலைவர் மெடிக்கல் M.செல்வம் தலைமை தாங்கினார்.

வட்டார தலைவர்கள் J.காத்தவராயன், R.இளவழகன், K.N.புவனேஸ்வரன், நகர தலைவர் V.P.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் இல.கண்ணன் தொகுதி ஒதுக்கீடு குறித்த விளக்க உரையாற்றி தீர்மான நகலை வாசித்தார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் M.சூரியமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் S.இருதயராஜ், மனித உரிமை J.சக்திவேல் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

ஐடி விங் மாவட்ட தலைவர் S.கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் R.அர்ஜுணன், K.M.பாபு, K.முத்து நாராயணன், வட்டார துணைத் தலைவர் K.சீத்தாபதி, மகிளா காங்கிரஸ் கொள்ளார் தமிழரசி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் K.K.சுப்ரமணி, E.ராஜ்குமார், K.கார்த்திகேயன், P.ஏழுமலை, சின்ன நெற்குணம் காத்தவராயன், ராதாகிருஷ்ணன், E.முருகன், D.ராமசாமி, சாகோ, R.கனகராஜ், செல்வராஜ், K.ஐயன், K.ஆறுமுகம், P.குப்பன், P.பொன்னுசாமி, பெரியான், பெருமாள், A.காளி, A.கமலக்கண்ணன் வல்லம் வட்டாரம் மொடையூர் கோவிந்தராஜுலு, விஸ்வநாதன், பூங்காவனம், மாரி, ராமு, காணை வட்டாரம் முன்னாள் ராணுவ வீரர் துரைசாமி, கண்ணன், பிரபு, மணிமாறன், உள்பட மேலும் பல நிர்வாகிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் குருசாமி நன்றி கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version