Home உலகம் கண்டாச்சிபுரம்,வீரங்கிபுரம் அருகே அரசு மதுபான கடை அமைப்பதை நிறுத்த கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை

கண்டாச்சிபுரம்,வீரங்கிபுரம் அருகே அரசு மதுபான கடை அமைப்பதை நிறுத்த கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை

0

மார்ச்-02/2026 கண்டாச்சிபுரம்.

தும்பரமேடு (வெண்மணிநகர்), குடியிருப்பு, (மற்றும்) அரசு துணை வேளாண்மை துறை கட்டிடம், தனியார் பள்ளி வளாகம், ஆகிய இடங்களுக்கு அருகாமையில் தேசிய நெடுஞ்சாலையில் (டாஸ்மார்க்) மதுபான கடையினை அமைப்பதை கைவிடக்கோரியும்

மழவந்தாங்கள் கூட்ரோடு அருகில் உள்ள மதுபான கடை அருகில் சுமார் 45-வயது உள்ள ஒரு விவசாயியை படுகொலை செய்யப்பட்டதை கிராம மக்கள் வன்மையாக கண்டித்து மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்

மேற்கண்ட மதுபான கடையினை கண்டாச்சிபுரம் குடியிருப்பு பகுதி வீரங்கிபுரம் எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில், மற்றும் தனியார் பள்ளி வளாகம், அரசு கட்டிடம் உள்ள இடத்தில் தற்போது கடையினை அமைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்

மேலும் சம்பந்தப்பட்ட துறை நிர்வாகங்கள் மேற்கண்ட இடத்தில் கடை அமைப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும் இல்லை என்றால் பொது மக்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து கட்சியும் இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்திடுவோம் என

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டாச்சிபுரம் கிளை.சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version