கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ADECOM நெட்வொர்க் – பெண்கள் வள மையம், கள்ளக்குறிச்சி சார்பில் 16 நாட்கள் பெண்கள் மீது வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட திருக்கோவிலூர் துணை ஆட்சியர் திரு. ஆனந்த் குமார் சிங், ஐ.ஏ.எஸ்., இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் “ஆன்லைன் செக்ஸ் டோர்ஷன்” குறித்துப் பேசினார். சமூக வலைதளங்கள் மூலம் முதலில் நட்பு ஏற்படுத்தி, பின்னர் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பெற்று அதனை மிரட்டலுக்குப் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இவ்வகை குற்றங்கள், குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் மாணவிகளின் மனநலத்தை கடுமையாக பாதிப்பதாகவும், பயம் மற்றும் அவமானம் காரணமாக பலர் மௌனமாக இருப்பது கவலைக்குரியது என்றும் அவர் கூறினார். ஆன்லைனில் அறிமுகமில்லாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், செக்ஸ் டோர்ஷன் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் பயப்படாமல் உடனடியாக காவல் துறை, பெண்கள் காவல் நிலையம் அல்லது பெண்கள் வள மையங்களை அணுக வேண்டும் என்றும், புகார் அளிப்பதன் மூலம் மட்டுமே குற்றவாளிகளை தடுக்க முடியும் என்றும் அவர் அறிவுறுத்தினார் ரெட்யூஸ் தமிழ் செய்திக்காக திருக்கோவிலூர் செய்தியாளர் முத்துக்குமரன்.
