Home செய்திகள் “யாரோ ஆற்றில் குதிச்சிட்டாங்க, பயமா இருக்கு!” — பதற்றத்துடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளம் பெண்

“யாரோ ஆற்றில் குதிச்சிட்டாங்க, பயமா இருக்கு!” — பதற்றத்துடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளம் பெண்

0

“யாரோ ஆற்றில் குதிச்சிட்டாங்க, பயமா இருக்கு!” — பதற்றத்துடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளம் பெண்.

செய்தி விவரம்: சென்னையில் மூத்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கே. ராஜன் (85), அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் உலுக்கியுள்ளது. அவர் இந்தத் தீவிர முடிவை எடுப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த வழியாகச் சென்ற பெண் ஒருவர் எடுத்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

நேற்று மாலை சுமார் 4:30 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது ஓட்டுநர் தனசேகருடன் காரில் வந்த கே. ராஜன், திரு.வி.க பாலம் அருகே காரை நிறுத்தச் சொல்லிவிட்டு, திடீரென ஆற்றில் குதித்துள்ளார். அந்தச் சமயம் பாலத்தைக் கடந்து சென்ற பெண் ஒருவர், அங்கு நிலவிய போக்குவரத்து நெரிசலையும் பொதுமக்களின் பதற்றத்தையும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். “யாரோ ஆற்றில் குதித்துவிட்டார்கள், ஆம்புலன்ஸ் இன்னும் வரவில்லை, எனக்குப் பயமாக இருக்கிறது” என அப்பெண் அதில் பேசியுள்ளார்.

அப்போது ஆற்றில் குதித்தது சினிமா பிரமுகர் கே. ராஜன் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்கவில்லை. மாலை 5:15 மணிக்கு தீயணைப்புத் துறையினர் உடலை மீட்ட பிறகே உண்மை தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்தத் தருணத்தில் பதிவான அந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. திரையுலக அரசியல் மற்றும் தயாரிப்பாளர்களின் நஷ்டம் குறித்துப் பொதுவெளியில் துணிச்சலாகப் பேசும் கே. ராஜன், குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படும் நிலையில், அடையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version