Wednesday, April 15, 2026
Google search engine
Homeஉலகம்ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய் துறை சங்கம் சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய் துறை சங்கம் சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்பது அம்ச சுகாரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக கருப்பு பேச் அணிந்தபடி தொடர் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

போராட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது

சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் மேலும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும் மேலும் TAPS திட்டத்தில் கிராம உதவியாளர்கள் முழுமையான பயன்களை பெறுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்

பணியின் போது உயிர் நீக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படை பணி நியமத்திற்கான உச்சவரம்பு 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பதாம் அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்தபடி இரண்டாவது நாளாக தொடர் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments