Thursday, May 14, 2026
Google search engine
Homeஉலகம்மரணத்திலும் பிரியாத பாசம்: ஜபல்பூர் படகு விபத்தில் குழந்தையை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய்!

மரணத்திலும் பிரியாத பாசம்: ஜபல்பூர் படகு விபத்தில் குழந்தையை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய்!

மரணத்திலும் பிரியாத பாசம்: ஜபல்பூர் படகு விபத்தில் குழந்தையை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய்!

ஜபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த கோரமான படகு விபத்து, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. டெல்லியிலிருந்து சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி, ஒரு நொடியில் பேரிழப்பாக மாறியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு தாயின் தியாகம் அங்கிருந்த மீட்புப் படையினரையும், பொதுமக்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

மரணத்தை வென்ற தாய்மை: மீட்புப் பணியின் போது கண்டெடுக்கப்பட்ட அந்தத் தாயின் உடல், தாய்மையின் உன்னதத்திற்குச் சான்றாக அமைந்தது. தண்ணீரில் மூழ்கும் கடைசித் தருணத்தில் கூட, தான் அணிந்திருந்த உயிர் காக்கும் கவசத்தை (Life Jacket) கழற்றி தன் குழந்தைக்கு அணிவிக்க அவர் முயன்றுள்ளார்.

பிரியாத பிணைப்பு: உயிர் பிரிந்த நிலையிலும், அந்தத் தாய் தன் குழந்தையை மார்போடு அணைத்திருந்த கைகளின் பிடி சற்றும் தளரவில்லை. தான் பிழைப்பதை விட, தன் குழந்தையின் மூச்சு நீடிக்க வேண்டும் என்பதே அந்தத் தாயின் இறுதி எண்ணமாக இருந்திருக்கிறது. “தன்னந்தனியாக இவ்வுலகில் வாழ்வதை விட, தன் குழந்தையோடு மறைவதே மேல்” என அந்தத் தாய் கருதியிருக்கக்கூடும் என மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம், ஒரு தாய் தன் குழந்தைக்கு வழங்கும் பாதுகாப்பு என்பது மரணத்தையும் தாண்டி நிற்கும் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments