ராமநாதபுரம் மாவட்டம்.
ராமநாதபுரம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் இன்று நகர் மன்ற கூட்டரங்கில் நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன்,துணைத் தலைவர் பிரவீன் தங்கம் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் ஆரம்பம் முதலே காரசாரமாக கூட்டம் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு நகராட்சி குறைபாடுகளை நீக்கித்தரவில்லை என திமுக கவுன்சிலர்களான 3வது வார்டு கவுன்சிலர் மங்கையர்கரசி, 25 வது வார்டு கவுன்சிலர் செல்வி, 26வது வார்டு கவுன்சிலர் லட்சுமி, 17வது வார்டு கவுன்சிலர் ஜோதி புஷ்பம்.8வது வார்டு
கவுன்சிலர் செல்வராணி, 10வது வார்டு கவுன்சிலர் சபீகா, 12 ஆவது வார்டு கவுன்சிலர் ஸ்டாலின், 33வது வார்டு கவுன்சிலர் ஜவா,
15 வது வார்டு தமுமுக கவுன்சிலர் காதர் பிச்சை, 4வது வார்டு கவுன்சிலர் அமமுக தனபாண்டியம்மாள், 21 வது வார்டு,அதிமுக இந்திரா மேரி ஆகியோர் மன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்து
நகர் மன்ற தலைவர் கார்மேகம் கூறுகையில் இன்னும் 10 நாட்களுக்குள் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தரப்படும் என்று கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் M.N. அன்வர் அலி



