ராமநாதபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்ஜி .மருது பாண்டியன் ஏற்பாட்டில்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் மாநில மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளராக அறிவித்தார். இதனை அடுத்து வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி திருவாடானை தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.கிராமம் கிராமமாகச் சென்று
வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். இன்று காலை பட்டணங்கத்தான் பேருந்து நிறுத்தம் அருகே ராமநாதபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்ஜி . மருதுபாண்டியன் ஏற்பாட்டில் வேட்பாளருக்கு மிகப் பிரமாண்டமான ரோஜா பூ மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார். இதனை அடுத்து அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் விஜிபி ஜெகன், (ம) வழக்கறிஞர் பிரிவு மோகன் பாபு, அம்மா பேரவை இணை செயலாளர் நாட்டு கோட்டை கார்த்தி, இளைஞரணி வினோத்
உள்ளிட்டோர்
சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். இதனை அடுத்து
அஇஅதிமுக பிரதிநிதிகள் நிர்வாகிகள் மகளிர் அணியினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். முன்னதாக வருகை தந்த வேட்பாளருக்கு மகளிர் அணியின் சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் M.N. அன்வர் அலி



