Monday, August 31, 2026
Homeஉலகம்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

6-3-2026  கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.வீ. ஸ்டாலின்மணி தலைமையில் நடைபெற்றது. ஏ சண்முகம். சி. பெரியசாமி ஆர். குணசேகரன் பி. மணி முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி மாநில பொருளாளர் கே.பி. பெருமாள் பேசினார் மற்றும் மாவட்ட பொருளாளர் எம்.சி. ஆறுமுகம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ். ஜோதிராமன் மாவட்ட துணை செயலாளர்கள் எம். வி. ஏழுமலை ஜி. அருள்தாஸ் ஜி. மணிமாறன் மாவட்ட துணைத்தலைவர்கள் பி. தெய்வீகன். கே. அய்யனார் வி. தொ. ச.மாவட்ட தலைவர் அ. பா. பெரியசாமி ஆகியோர் கலந்து கோண்டனர் ஆர்ப்பாட்டத்தில் 300 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள்1.கள்ளக்குறிச்சி மாவட்டம். நயினார்பாளையம் கிராமம் மணிமுத்தாறு நதிக்கரையில் மனித கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தாள் விவசாயத்துக்கும் சுற்றுச்சூழல் பாதிக்கும் துர்நாற்றம் வீசும் குடிநீர் ஆதாரங்கள் அழியும் எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும்.

2. திருநாவலூர் ஒன்றியம் ஒரத்தூர் முதல் களர்குப்பம் வரை பாதூர் முதல் சேஷநதி வரை வயல் வெளிசாலை அமைத்திடவும் ஆனல மடுவு குட்டையை ஆழ படுத்திட வலியுறுத்தியும்
3. திருநாவலூர் ஒன்றியம் செம்மணங்கூர் முதல் நெமிலி பஸ் நிறுத்தம் வரை வயல்வெளிச்சாலையை தார்சாலையாக அமைத்து கொடுக்க கோரியும்.
4. தியாகதுருகம் ஒன்றியம் சிறுநாவலூர் ஊராட்சி சித்தேரிக்கரை செல்லும் சாலையை உடனடியாக சீர் செய்து தரகோரியும்.
5. உளுந்தூர்பேட்டை ஒன்றியம் எம். குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து கிளியூர் சிவன் கோயில் வரை உள்ள வயல்வெளிச்சாலையை சீரமைத்து தரகோரியும்
6. கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட அலுவலர் ராமேஷ் குமார்.கான்ட்ராக்ட்டர் காரர்களுக்கும் கமிஷன் கொடுப்பவர்களுக்கும் ராஜை மரியாதை உடன் வரவேற்பு தருவதும்.. விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக மனு கொடுக்க சென்றால் விவசாய சங்க தலைவர்களை அவமரியாதை செய்யும் திட்ட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் முதல் கோரிக்கையான நயினார்பாளையம் மணிமுத்தாறு நதிக்கரையில் மனித கழிவுகளை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து உத்தரவு விட்டுள்ளது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

இவண்
ஏ. வீ. ஸ்டாலின்மணி.
மாவட்ட செயலாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments