தேசிய நல்லாசிரியர் விருது 2025: தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் தேர்வு.. அவர்கள் யார்?
டெல்லி:
நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கு தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூன் மாதம் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
தனியார் பள்ளி ஆசிரியை ரேவதிக்கு தேசிய ஆசிரியர் விருது மற்றும் திருப்பூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமிக்கும்

அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெற தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதிக்கு தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருப்பூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமிக்கும் தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசும், வெள்ளிப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் கைகளிலிருந்து இந்தச் சான்றிதழைப் பெறுகிறார்கள். தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களைப் பலர் வாழ்த்தி வருகின்றனர்.



