Monday, August 31, 2026
Homeசெய்திகள்மேகதாட்டு அணை விவகாரம்: கர்நாடகா அழைப்பை நிராகரிக்க வலியுறுத்தல் - தமிழக விவசாயிகள் எச்சரிக்கை!

மேகதாட்டு அணை விவகாரம்: கர்நாடகா அழைப்பை நிராகரிக்க வலியுறுத்தல் – தமிழக விவசாயிகள் எச்சரிக்கை!

மேகதாட்டு அணை விவகாரம்: கர்நாடகா அழைப்பை நிராகரிக்க வலியுறுத்தல் – தமிழக விவசாயிகள் எச்சரிக்கை!

 

மயிலாடுதுறை / சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் புதிய அணை கட்டுவது தொடர்பாகக் கர்நாடக அரசு விடுத்துள்ள இருதரப்பு பேச்சுவார்த்தை அழைப்பைத் தமிழக அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

விவசாயிகள் சங்க கூட்டமைப்பு கூட்டம்:

மயிலாடுதுறையில் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது:

“மேகதாட்டு அணை தொடர்பாகத் தமிழக முதலைமைச்சரை நேரில் சந்தித்துப் பேசக் கர்நாடக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேகதாட்டுவில் அணை கட்டுவதும், அது தொடர்பாகத் தமிழகத்துடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் முற்றிலும் எதிரானது.”

காவிரி மேலாண்மை ஆணையமே இறுதி:

  • நேரடி பேச்சுவார்த்தைக்குத் தடை: கடந்த காலங்களில் மாநிலங்களுக்கு இடையே நடத்தப்பட்ட நேரடிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில்தான் முடிந்துள்ளன. எனவே, கர்நாடகா விடுத்துள்ள இந்த அழைப்பைத் தமிழக முதல்வர் உடனடியாக நிராகரிக்க வேண்டும்.

  • ஆணையத்தின் அதிகாரம்: காவிரி நீர் பங்கீடு தொடர்பான அனைத்து விவகாரங்களையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மட்டுமே தீர்மானிக்க வேண்டும்.

  • போராட்டம் எச்சரிக்கை: ஒருவேளை தமிழக அரசு கர்நாடகாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், தஞ்சை காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் என்றும் விவசாயிகள் அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments