சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ!!
ராமநாதபுரம் அருகில் உள்ள கீழக்கரை நகராட்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வழங்கினார்,
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் எம்எல்ஏவும் திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நகராட்சி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.முன்னதாக கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகிலும்,முகம்மது காசிம் அப்பா தர்ஹா பகுதிகளிலும்,வடக்கு தெரு கொந்த கருணை அப்பா தர்ஹா பகுதியிலும் சுமார் 15 ஆயிரம் பேர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி பேசியதாவது:- எல்லா வகையிலும் தமிழ்நாடு தான் முதலீடமாக இருக்கிறது.தமிழ்நாட்டில் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மகத்தான திட்டங்களை அறிவித்தார்.தமிழ்நாட்டில் 2.50லட்சம் பெண்கள் இருக்கிறார்கள்.மேலும் பேருந்தில் பயணம் செய்ய முடியுமா?இந்த திட்டம் அனைத்து மக்களுக்கு அமுல் படுத்துவது சாத்தியமா என்று சட்டமன்றத்தில் கேள்வி கேட்டார்கள்! அப்போது தமிழக முதலமைச்சர் சொன்னார் 2 கோடியே 50 லட்சம் பெண்கள் பயணிப்பதற்காகத்தான் மகளிருக்காக விடியலை ஏற்ப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் மகளிர் விடியல் பயணம்.பட்டி தொட்டியில் உள்ள பெண்கள் எல்லாம் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.இதனை அடுத்து பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டும் முத்தமிழ் அறிஞர்கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டும் மகளிருக்கு ரூ .1000, மகளிர் உதவித் தொகை வழங்கினார்.இந்தியாவிலேயே அதிகம் பெண்கள் வேலைக்கு போகும் மாநிலம் தமிழ்நாடு தான் மேலும் இஸ்லாமிய மக்கள் மத்தியில் பேசும் பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் மோதினார்,பள்ளிவாசலின் ஆலிம் பெருமக்கள்,இவர்களுக்கு இரு சக்கர வாகன வழங்குவதற்கு ரூபாய் 25 ஆயிரம்மானியம் வழங்கியதோடு,தமிழகத்திலிருந்து ஹஜ்ஜுக்கு செல்ல யாத்திரிகர்கள் சென்னை வந்து அங்கிருந்துதான் ஹஜ் செய்வதற்கு செல்ல வேண்டும்.இப்படி வருகின்ற இஸ்லாமிய யாத்திரிகர்கள் பல்வேறு இடங்களில் தங்குகிறார்கள்.இதற்காக தமிழக முதல்வர் ஹஜ் பயணிகளுக்காக விமான நிலையம் அருகிலேயே ஒரு தங்க விடுதியை கட்டிக் கொடுத்துள்ளார்கள். இதனை அடுத்து நேற்று முன்தினம் மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ. 1000, ஐ,வருகின்ற போது மூன்று மாதங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ. 3000/=ஒரே தவணையில் வழங்குவதற்கு உத்தரவிட்டு உள்ளார்.அன்புடன் சேர்த்து கோடைகால சிறப்பு தொகையாக ரூ. 2000/=சேர்த்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் எதிர்க்கட்சியினர் கோர்ட்டுக்கு சென்று இந்த திட்டத்தை நிறுத்தி விட வாய்ப்பு உள்ளது.கோடை காலம் மற்றும் தேர்தல் காலத்தில் ஏழைகள் கஷ்டப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் முதலமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளார்.தற்போது மொத்தம் 5000 பெண்களின் வங்கிகணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக முழுவதும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடக்கத்தில் ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது.தற்போது மேல் முறையீடு செய்தவர்களையும் சேர்த்து ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.மாலை நேரமாக இருந்தாலும் பொதுமக்களும் இஸ்லாமிய பெருமக்களும் அந்தந்த பகுதிக்கு வருகை தந்து நலத்திட்ட உதவிகளை வாங்கிச் சென்றார்கள். இந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும்,நகர் செயலாளர் பஷீர்,தலைமையற்றார். நகர்மன்ற தலைவர் செகானாஸ் ஆபிதா,துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான்,உள்ளிட்ட கவுன்சிலர் மீரான் அலி,உள்ளிட்ட நகர்மன்ற கவுன்சிலர்கள்,அனைத்து ஜமாஅத்தார்கள், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.கீழக்கரைகாவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் M.N. அன்வர் அலி



