Monday, August 31, 2026
Homeவேலைவாய்ப்பு10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை! ரூ.40,000 சம்பளத்தில் அக்னிவீர் வாயு வேலைவாய்ப்பு!

10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை! ரூ.40,000 சம்பளத்தில் அக்னிவீர் வாயு வேலைவாய்ப்பு!

10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை! ரூ.40,000 சம்பளத்தில் அக்னிவீர் வாயு வேலைவாய்ப்பு!

 

சென்னை: இந்திய விமானப்படையில் ‘அக்னிவீர் வாயு’ (போர் சாராத பணிகள்) திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் உடல் தகுதி:

  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ஆம் வகுப்பு (SSLC / Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • திருமண நிலை: திருமணமாகாத இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

  • உடற்தகுதி: குறைந்தபட்சம் 152 செ.மீ உயரமும், 5 செ.மீ மார்பளவு விரிவடையும் திறனும் இருக்க வேண்டும். நல்ல கண்பார்வை மற்றும் கேட்கும் திறன் அவசியம்.

பணியின் தன்மை & இடங்கள்: இது முற்றிலும் போர் சாராத (Non-Combatant) ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். இதில் சமையல், சமையலறை பராமரிப்பு, உணவுப் பொருட்கள் சேமிப்பு மற்றும் உபகரணங்களைப் பராமரித்தல் போன்ற பணிகள் அடங்கும்.

தமிழகத்தில் தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 134 விமானப்படை மையங்களில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சம்பளம் & சேவா நிதி: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படும்.

  • மாதச் சம்பளம்: முதல் ஆண்டில் ₹30,000 முதல் ₹40,000 வரை வழங்கப்படும்.

  • சேவா நிதி: 4 ஆண்டுகள் பணி நிறைவுக்குப் பிறகு ₹10.4 லட்சம் மதிப்பிலான ‘சேவா நிதி’ தொகுப்பு வழங்கப்படும்.

தேர்வு முறை & கடைசி நாள்: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் 2026 ஆகஸ்ட் 17-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments