Home செய்திகள் “வெறும் இரண்டே நாளில் கபினி அணை எப்படி நிரம்பியது?” – காவிரி ஆணையத்தின் கண்காணிப்பை கேள்வி...

“வெறும் இரண்டே நாளில் கபினி அணை எப்படி நிரம்பியது?” – காவிரி ஆணையத்தின் கண்காணிப்பை கேள்வி எழுப்பும் சிபிஎம்!

0
“வெறும் இரண்டே நாளில் கபினி அணை எப்படி நிரம்பியது?” – காவிரி ஆணையத்தின் கண்காணிப்பை கேள்வி எழுப்பும் சிபிஎம்!

 

சென்னை: கர்நாடகாவில் உள்ள கபினி அணை வெறும் இரண்டே நாட்களில் எப்படி நிரம்பியது என்றும், இதுதான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கண்காணிப்புத் தரமா என்றும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரண்டே நாளில் மாறிய நிலைமை: காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு தினசரி 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவிட்ட போது, “குடிநீருக்கே வழி இல்லை, அணைகளில் போதிய நீர் இல்லை” என கர்நாடக அரசு சாக்குபோக்கு சொன்னதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், அடுத்த இரண்டே நாட்களில் நிலைமை தலைகீழாக மாறி, அணை நிரம்பி வழிவதையும், பாதுகாப்பு கருதி வினாடிக்கு 25,000 கன அடி நீர் வரை வெளியேற்றப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“காவிரி ஆணையத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து கர்நாடகா நீர் திறக்கவில்லை; அணையின் பாதுகாப்பு கருதியும் வெள்ள அபாயத்தைத் தவிர்க்கவுமே நீரைத் திறந்துவிட்டுள்ளனர். இறுதியில் இயற்கையே வென்றுள்ளது” என சண்முகம் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பந்த் அறிவிப்பு & விஜய்க்கு எதிர்ப்பு: இதனிடையே, தமிழகத்திற்கு நீர் திறப்பதைக் கண்டித்து ஆகஸ்ட் 13 அன்று கர்நாடகா முழுவதும் 12 மணி நேரப் போராட்டம் (பந்த்) நடத்தப்படும் என கன்னட அமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தின் தரப்பில் பேச முயலும் நடிகர் விஜய்யின் பெங்களூரு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரித்ததைத் தொடர்ந்து, “இப்போதைக்கு கர்நாடகா வர வேண்டாம்” எனத் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் விஜய்யைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version