Monday, August 31, 2026
Homeசெய்திகள்தொகுதி மறுவரையறை மற்றும் காவிரி விவகாரம்: 'தமிழக உரிமைகள் பாதுகாக்கப்படும்' - திமுக தீவிர ஆலோசனை!

தொகுதி மறுவரையறை மற்றும் காவிரி விவகாரம்: ‘தமிழக உரிமைகள் பாதுகாக்கப்படும்’ – திமுக தீவிர ஆலோசனை!

தொகுதி மறுவரையறை மற்றும் காவிரி விவகாரம்: ‘தமிழக உரிமைகள் பாதுகாக்கப்படும்’ – திமுக தீவிர ஆலோசனை!

 

 

சென்னை: மத்திய அரசு திட்டமிட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கை மற்றும் காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரங்கள் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளன.

தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் நிலைப்பாடு: தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது, மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையக்கூடாது என்பதில் தெளிவான நிலைப்பாடு தேவை என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழ்நாட்டிற்கும் தென்னிந்திய மாநிலங்களுக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. மசோதாவில் முன்மொழியப்படும் அம்சங்களை ஆராய்ந்து, கட்சியின் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உரிய முடிவுகளை மேற்கொள்வார்” என்று தெரிவித்தார்.

காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: அதேவேளையில், டெல்டா மாவட்டங்களின் விவசாயத்தைப் பாதுகாக்கவும், குடிநீர் தேவையை உறுதி செய்யவும் காவிரி நீர் உரிமை மிக முக்கியமானது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் போராட அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments