Monday, June 1, 2026
Google search engine
Homeசெய்திகள்நெல்லையில் பயங்கரம்: தம்பி மற்றும் நண்பரால் வங்கி பெண் மேலாளர் வெட்டிப் படுகொலை - மகளின்...

நெல்லையில் பயங்கரம்: தம்பி மற்றும் நண்பரால் வங்கி பெண் மேலாளர் வெட்டிப் படுகொலை – மகளின் கண் முன்னே கொடூரம்!

நெல்லையில் பயங்கரம்: தம்பி மற்றும் நண்பரால் வங்கி பெண் மேலாளர் வெட்டிப் படுகொலை – மகளின் கண் முன்னே கொடூரம்!

 

பாளையங்கோட்டை:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், 34 வயதுடைய தேசியமயமாக்கப்பட்ட வங்கி பெண் மேலாளர் ஒருவர், தனது சொந்த தம்பி மற்றும் அவரது நண்பரால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி விவரம்:
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள சென்னல்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் முத்துமாலை (34). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். முன்னதாக, வங்கித் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் பயின்ற போது ஏற்பட்ட காதலால், சங்கர் (36) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார்.

கருத்து வேறுபாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத் வங்கிக்கு மாறுதல் பெற்றுச் சென்ற சங்கர், முத்துமாலையை விவாகரத்து செய்துவிட்டு, ஆந்திராவைச் சேர்ந்த வேறொரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். இதனால் முத்துமாலை தனது மகளுடன் சென்னல்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை தியாகராஜ நகர் பகுதிக்குக் குடிபெயர்ந்தார்.

நிகழ்ந்த கொடூரம்:
கடந்த முன்தினம் இரவு, தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு முத்துமாலை தனது மொபெட் வாகனத்தில் மகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்து அவர் தப்பியோட முயன்றபோது, வீட்டின் வாசலிலேயே அவரது மகளின் கண் முன்னால் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அந்த நபர்கள் தப்பியோடினர்.

காவல்துறை விசாரணை மற்றும் அதிர்ச்சித் தகவல்:
இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், முத்துமாலை சென்னல்பட்டியில் வசித்தபோது, நாங்குநேரிக்கு அருகில் உள்ள ஆழ்வானேரியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான இசக்கிபாண்டி (20) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் வயது வித்தியாசத்தைக் குறிப்பிட்டு, பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்தத் தொடர்பைக் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

இருப்பினும், முத்துமாலை அந்த இளைஞருடனான தொடர்பைத் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த அவரது சொந்த தம்பி பன்னீர்செல்வம், தனது நண்பர் சிவாவின் உதவியுடன் இந்தத் துணிகரக் கொலையைச் செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஒருவர் கைது – இருவருக்கு வலைவீச்சு:
கடந்த ஒரு வாரமாக முத்துமலையின் நடமாட்டத்தைக் கண்காணித்து, கொலையாளிகளுக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுத்து வந்த முத்துமலையின் மாமன் மகனான இசக்கிபாண்டி (32) என்பவரைப் போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முத்துமலையின் தம்பி பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments