தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.செல்வபெருந்தகை MLA.,
தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் டாக்டர் M.K.விஷ்ணு பிரசாத் MP.,அறிவுறுத்தலின்படி
விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வழக்கறிஞர் R.R.ரமேஷ் வழிகாட்டுதல்படி
26-1-2026 திங்கள் காலை 9.00 மணியளவில் கூட்டேரிப்பட்டு 4 – முனை சந்திப்பில்
மயிலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாட்டின்
77 -வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது
நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் இல.கண்ணன் தலைமை ஏற்று இந்தியா ஜனநாயக நாடாக மலர்ந்திட காங்கிரஸ் பேரியக்கமும் அதன் தலைவர்களும் அரும்பாடு பட்ட வரலாற்று உரையை நிகழ்த்தினார்
மாவட்ட துணைத் தலைவர் S.இருதயராஜ், மாவட்ட செயலாளர் R.அர்ச்சுணன், ஐடி விங் மாவட்ட தலைவர் S.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மயிலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் மெடிக்கல் M.செல்வம் தேசியக்கொடி ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் வட்டார துணைத் தலைவர் K.சீத்தாபதி, வட்டார பொருளாளர் S.பலராமன், எஸ்.சி துறை வட்டார தலைவர் S.கலிவரதன், P.பொன்னுசாமி, P.தீர்த்தமலை, B.நரசிம்மன், D.தண்டபாணி, E.கருணாநிதி, G.அன்பழகன், காத்தவராயன், ஐடி விங் மாவட்ட செயலாளர்கள் K.கார்த்திகேயன், E.ராஜ்குமார், K.லட்சுமணன், H.முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



