Thursday, April 16, 2026
Google search engine
Homeசெய்திகள்துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் நடவடிக்கை எடுத்தது

துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் நடவடிக்கை எடுத்தது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றிi உளுந்தூர்பேட்டை வட்டம் புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் செந்தமிழ்ச்செல்வன் ரஞ்சித்குமார் ராகவன் கதிரவன் பிச்சக்காரன் சிவக்குமார் ஜெயச்சந்திரன் மணிகண்டன் எல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் ஆகியோரை எலவனாசூர்கோட்டையை சேர்ந்த ஆனந்த் என்பவர் துபாய் நாட்டில் Ware House packing Company யில் மாதச் சம்பளம் 1500 திராம்ஸ் (ரூ. 36000) கொடுப்பதாக கூறி கடந்த நவம்பர்15.16 2025 அன்று அனுப்பி குறிப்பிட்டது போல் அவர்களுக்கு வேலை வழங்காமல் அஜ்மன் நகரில் ஒரு அறையில் அனைவரும் தங்க வைக்கப்பட்டு அங்கிருந்த நவாப் என்பவர் அனைவரது பாஸ்போர்ட்டையும் புடுங்கி வைத்துக் கொண்டார். வேலை இன்றி கையில் வைத்திருந்த பணத்தை உணவுக்கு செலவு செய்து பணமின்றி பட்டினி கிடந்தனர். இப்படியே 20 நாட்கள் கடந்தனர். துபாயில் பசி பட்டினியால் வாடிய பெற்றோர்கள் மனைவிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதவியை நாடியபோது 6-12-2025 அன்று மாவட்ட ஆட்சியரையும். உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களையும் மனு கொடுத்து பேசியவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைவரும் சொந்த ஊர் திரும்பினார்கள்.

ஏர் டிராவல்ஸ் உரிமையாளர் ஆனந்த் மீது புகார் கொடுத்து ஒவ்வொரு நபரும் கொடுக்கப்பட்ட தலா ரூ. 110000 த்தில் துபாய்க்கு அனுப்பிய செலவு தொகை போக மீதி ஒவ்வொரு நபருக்கும் 70000 கொடுப்பதாக உறுதியளித்து இதில் பாதித்தொகை தலா ரூ. 35000 இன்று பெற்றுத் தரப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் பாராட்டி வாழ்த்தி சென்றார்கள். தோழமையுடன் வி.ரகுராமன் ஒன்றிய செயலாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உளுந்தூர்பேட்டை மேற்கு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments