Thursday, May 14, 2026
Google search engine
Homeசெய்திகள்வேல்முருகனின் 'தனித்து போட்டி' வியூகம் கை கொடுக்குமா? பழைய வழக்குகளால் கட்சிக்கு வரும் நெருக்கடி -...

வேல்முருகனின் ‘தனித்து போட்டி’ வியூகம் கை கொடுக்குமா? பழைய வழக்குகளால் கட்சிக்கு வரும் நெருக்கடி – ஒரு அலசல்

வேல்முருகனின் ‘தனித்து போட்டி’ வியூகம் கை கொடுக்குமா? பழைய வழக்குகளால் கட்சிக்கு வரும் நெருக்கடி – ஒரு அலசல்

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி (TVK) மற்றும் அதன் தலைவர் வேல்முருகன் தரப்பில் நிலவும் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேறியது ‘துணிச்சலா’ அல்லது ‘துன்பமா’ என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது.

கூட்டணி முறிவும்… தன்மான அரசியலும்: 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் வெற்றி பெற்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆளுங்கட்சியின் ஆதரவு வளையத்திற்குள் இருந்த அவருக்கு, இந்தத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் பெரும் ஏமாற்றம் மிஞ்சியது. திமுக தரப்பு ஒரே ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முன்வந்ததால், “தன்மானமே முக்கியம்” எனக் கூறி கடைசி நேரத்தில் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினார் வேல்முருகன்.

பழைய வழக்குகள் – தூசு தட்டப்படும் அச்சம்: தற்போது தனித்துப் போட்டியிட்டுள்ள நிலையில், ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தங்களுக்கு எதிரான சட்ட ரீதியான நெருக்கடிகள் அதிகரிக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.

  • தூசி தட்டப்படும் வழக்குகள்: கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்ததால் கிடப்பில் போடப்பட்டிருந்த பழைய வழக்குகள், தற்போது மீண்டும் மறுவிசாரணைக்கு எடுக்கப்படலாம் என்ற அச்சம் அக்கட்சியினரிடையே பரவியுள்ளது.

  • நேரடி மோதல்கள்: தேர்தல் பிரச்சாரத்தின் போது பல இடங்களில் திமுக மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரிடையே கடுமையான மோதல்கள் வெடித்தன. இந்த கசப்பான சம்பவங்கள், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பழிவாங்கும் அரசியலாக மாறக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

அதிமுகவை விட திமுக வெற்றியை எண்ணிப் பதறும் வேல்முருகன் டீம்! அரசியல் வட்டாரங்களில் கசியும் தகவல்களின்படி, அதிமுகவின் வெற்றியை விட திமுகவின் வெற்றி வாய்ப்பைக் குறித்துத்தான் வேல்முருகன் தரப்பு அதிக அச்சத்தில் உள்ளதாம். திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால், வேல்முருகனின் அரசியல் எதிர்காலத்திற்குப் பல முட்டுக்கட்டைகள் போடப்படலாம் எனத் தெரிகிறது. ஒருவேளை திமுக ஆட்சி அமைக்க முடியாமல் போனால் மட்டுமே தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று TVK தலைமை கணக்குப் போடுகிறது.

அக்னிப் பரீட்சையில் வேல்முருகன்: தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள வேல்முருகனுக்கு, இந்தத் தேர்தல் ஒரு வாழ்வா-சாவா போராட்டமாக மாறியுள்ளது. அவர் எதிர்பார்த்த வாக்குகளைப் பெறத் தவறினால், அது திமுகவின் கரத்தையே வலுப்படுத்தும். வேல்முருகன் எடுத்த இந்தத் துணிச்சலான முடிவு அவருக்கு அரசியல் ரீதியாகப் புது வாழ்வு தருமா அல்லது நெருக்கடிகளைக் கொண்டு வருமா என்பது நாளை மறுநாள் (மே 4) தெரிந்துவிடும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments