Monday, August 31, 2026
Homeசெய்திகள்எடிட்டிங் ரூமிலேயே திருட்டு! 'ஜனநாயகன்' படத்தைக் கசியவிட்ட 3 எடிட்டர்கள் கைது - சைபர் கிரைம்...

எடிட்டிங் ரூமிலேயே திருட்டு! ‘ஜனநாயகன்’ படத்தைக் கசியவிட்ட 3 எடிட்டர்கள் கைது – சைபர் கிரைம் அதிரடி.

எடிட்டிங் ரூமிலேயே திருட்டு! ‘ஜனநாயகன்’ படத்தைக் கசியவிட்ட 3 எடிட்டர்கள் கைது – சைபர் கிரைம் அதிரடி.

சென்னை: நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில், தற்போது மேலும் 3 முக்கிய குற்றவாளிகளைத் தமிழக சைபர் கிரைம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதில் திடுக்கிடும் தகவலாக, படத்தொகுப்பு (Editing Studio) அறையிலிருந்தே காட்சிகள் திருடப்பட்டது அம்பலமாகியுள்ளது.

எடிட்டிங் ஸ்டுடியோவில் திருட்டு: தணிக்கைக் குழுவின் சிக்கல் மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, படத்தொகுப்பு அறையில் பணியாற்றிய ஒரு சுயாதீன எடிட்டர், படத்தின் ரீல்களை அனுமதியின்றித் திருடியுள்ளார். திருடப்பட்ட அந்த ரீல்களை ஒன்றாக இணைத்து ஒரு முழுத் திரைப்படமாக மாற்றி, அதை இணையதளங்களில் கசியவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி: ஏற்கனவே இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கைதான 3 பேரையும் சேர்த்து மொத்தம் 9 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும், படம் சட்டவிரோதமாகப் பகிரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட இணையதள லிங்குகளை போலீசார் முடக்கியுள்ளனர். திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே முழுப் படமும் கசிந்தது படக்குழுவினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments