ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பரம் சக்தி யோகா அறிமுக வகுப்பு இன்று காலை நடைபெற்றது.
பாரதத்தின் பழம்பெறும் கலையான தியானம் யோகா மற்றும் பிராணயமும் மூலம் பண்டைய வாழ்வியல் முறைக்கு திரும்புதல் மூலம் ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம்மிட பரம் சக்தி யோகா என்னும் கலையை 35 ஆண்டுகால அனுபவமிக்க அருட் திரு வி.எஸ்.சேகர் ஜெயந்தன் அறிமுக உரையாற்றினார்.
அமைதி,சுகம் ஆனந்தம் மகிழ்ச்சி அன்பு கருணை செல்வம் இன்பம் அனைத்தும் நிரந்தரமாக கிடைத்திட பரம் சக்தியோகம் பற்றி அருட்திரு வி.எஸ் சேகர் ஜெயந்தன் உரையாற்றினார். இதில் முன்னதாக குத்துவிளக்கேற்றி வைத்தனர்.முதுகுளத்தூர் செல்வி மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் ராம்குமார்,தமிழ்ச்செல்வி உதயகுமார்,ஜி.எம், பைனான்ஸ் மாரிமுத்து,ராமநாதபுரம் மணி ரியல்ஸ் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பரம் சக்தி யோகா என். மகேஸ்வரன் நன்றி உரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் M.N. அன்வர் அலி



