புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார் கோவில் பாரதியார் நகரை சேர்ந்த கண்ணன்(45)
அவருடைய சகோதரர் கார்த்திக் (37)ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி தற்பொழுது தீவிர விசாரணையில் ஈடுபட்டனர் அதில் முதல் கட்டமாககொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்தது மாவட்ட காவல்துறை விசாரித்தனர் அதில் முன்விரோதம் காரணமாக இரண்டு சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது
ஆவுடையார் கோவில் பகுதியில் 2 சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது
ரூ.40 ஆயிரம் பண பிரச்சினையால் கண்ணன்,கார்த்திக்கை காளிதாஸ் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்



